Friday, July 6, 2018

அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி

அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம் - சிலுக்குவார்பட்டி

'தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்து பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினராக உன்னை ஏற்படுத்தினேன்' என்று எரேமியாவிற்கு அருளப்பட்ட இறைவாக்கின்படி துறவிகளாகிய ஒவ்வொருவரையும் இறைவன் இறைவாக்குரைக்கும் பணிக்கென அழைத்துள்ளார். 'எளிமை அன்பு வழியில் எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கவே என்று தூய ஆவியின் வல்லமையால் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்து தொழுகைக் கூடத்தில் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவித்தார் இறைமகன் இயேசு. அவரது வழி சென்று மதுரை மாநில சகோதரிகள் நற்செய்திப் பணியை அமலவை பிறந்து வளர்ந்த பங்குகளில் அறிவிக்கவும், இன்னும் பிற இடங்களிலும் நற்செய்தியை பறைசாற்றுவதுமே இம்மையத்தின் நோக்கம். 

06.07.2018 இன்று சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை பால்ராஜ் அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். பொது ஆலோசகர் சகோதரி தனசீலி செங்கோல் கட்டிடத்தையும், மதுரை மாநிலத் தலைவி சகோதரி அ. ஞானசௌந்தரி கல்வெட்டையும் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருட்தந்தை இஞ்ஞாசி நற்செய்திப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர், சிலுக்குவார்பட்டி பங்குத்தந்தை, நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு மூவரும் இணைந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். இந்நிகழ்விற்கு நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்களும், முன்னாள் அதிபர் அன்னை சகோ. ஆக்னஸ் சேவியர் அவர்களும், சபைத்தலைமையகத்திலிருந்தும், சிவகங்கை மற்றும் பாளை மாநிலங்களிலிருந்து சகோதரிகளும், சிலுக்குவார்பட்டியைச் சுற்றியுள்ள அமலவைக் குழுமங்களிலிருந்து சகோதரிகளும், அமலவைத் தோழர்களும், ஊர்ப்பெரியவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்புறச் செய்தனர். திருப்பலியின் முடிவில் அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்தனர். மனநிறைவோடு தங்கள் இல்லம் திரும்பினர்.

No comments:

Post a Comment