Thursday, July 5, 2018

நற்செய்திப்பணி மையம் திறப்புவிழா - சிலுக்குவார்பட்டி

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'. - மாற். 16:15

என்ற இறைவார்த்தையைத் தம் திருத்தூதர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார் ஆண்டவர் இயேசு. அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். நற்செய்தி அறிவிக்க வேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன். (உரோ. 1:15) என்றுரைத்து தனது வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் கிறிஸ்துவாகிய நற்செய்தியை அறிவித்த புனித பவுல் அடியாரைப் போல நற்செய்திப் பணியாற்ற தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார் (உரோ.8:30). அதன்படி நமது நிறுவுனர் தந்தை அகுஸ்தின் பெரைரா அவர்கள்  முதன்முதலாக தம் காலடி பதித்து இறைவார்த்தையை சிலுக்குவார்பட்டி மண்ணில் வேரூன்றச்செய்தார். அவர் அடியொற்றி,  அவரின் நினைவாக, இன்று இவ்விடத்தில் நற்செய்திப்பணிக்கென்று 'அகுஸ்தினார் நற்செய்திப்பணி மையம்' எனப் பெயரிட்டு துவங்கப்பட்டுள்ளது. 
எளிமை, அன்பு, எளியோர்க்கு நற்செய்தி என்னும் தனிவரத்தை வாழ்வாக்கிட, சகோதரிகள் இவ்வில்லத்திலிருந்து நற்செய்திப்பணி செய்வதோடு, இப்பணிக்கென்று மக்களை தயாரிக்கவும், அவர்களை வழிநடத்தக் கூட்டமும், பணியைப் பற்றிய திறனாய்வும் செய்வர். இவ்வில்லத்தின் அர்ச்சிப்பு நாளை 06.07.2018 அன்று நடக்க இருப்பதால் அனைத்து அமலவைச் சகோதரிகளும் தங்கள் செபத்தால் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1 comment: