Monday, July 23, 2018

புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாமரைப்பாடி – திண்டுக்கல்

புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தாமரைப்பாடி – திண்டுக்கல்


 'பெண்களைப் படிக்க வைப்பதும், பக்குப்படுத்துவதும் இறைவழிபாட்டிற்குச் சமம்' என்றார் நேரு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து, அதற்குமேல் படிக்க வைக்க இயலாத குடும்பங்களில் இருந்து வெளிவரும் இளம் பெண்கள் மில் வேலைக்குச் சென்று, வாழ்க்கையை தொலைத்துவிடும் திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் வாழ்வு முன்னேற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட புனித அந்தோணியார் கலை கல்லூரி, இன்று தொலைநோக்குப் பார்வையோடு பெண்களின் வாழ்வு முன்னேற உழைத்து வருவது சிறப்புக்குரியது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிவேகமாக வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது இக்கல்லூரி. இளம் பெண்களின் அறிவுத்தாகத்தைத் தீர்த்து சமுதாயத்தின் விடிவெள்ளிகளாக அவர்களை ஒளிரச் செய்கின்றது. மாணவியர் அறிவியல், கலை மற்றும் தொழில் நுட்பத்தில் வளரவும், அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு, உள நலம் மற்றும் மன நலம் பேணப்படும் விதமாக பல பயிற்சிகள் இக்கல்லூரியில் அளிக்கப்படுகிறது. இன்று இக்கல்லூரியில் மதுரை மாநிலத் தலைவி சகோதரி ஞான சௌந்தரி அவர்களால் அமலா கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது. திண்டுக்கல் ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களால் இக்கட்டிடம் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது. மேதகு ஆயர் அவர்களுடன் 8 அருட்தந்தையர்கள்; இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் செயலர் சகோதரி மார்கிரேட் இன்பசீலி அவர்கள் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் சகோதரி பிரமிளா மேரி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். அதன்பின் மிகச்சிறந்த வகையில் கல்லூரி மாணவிகளால் சிறிய கலைநிகழ்ச்சி 'பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டு' வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் விருந்து அனைவருக்கும் பகிரப்பட்டது.

No comments:

Post a Comment