Friday, June 29, 2018

குழந்தை இயேசு இல்லம் - நிலக்கோட்டை

'ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்,
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்'. - தி.பா. 19:1

இறைவனின் வியத்தகு செயல்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டையில் உள்ள குழந்தை இயேசு இல்லம் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வில்லத்தில் 3 சகோதரிகள் தங்கி தங்களின் எளிய வாழ்வாலும், நம் சபையின் தனிவரத்திற்கும் உள்ளுயிருக்கும் சான்று பகரும் விதத்திலும் நற்செய்தி மற்றும் பங்குப்பணி ஆற்றுவார்கள். 
29.06.2018 இன்று நிலக்கோட்டை பங்குத்தந்தை பிரபு அவர்கள் இவ்வில்லத்தை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். இந்நிகழ்வானது, நம் மதுரை மாநில அன்னை, மாநிலதுணைத்தலைவி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வில்லத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிளை இல்லங்களிலிருந்து அமலவைச் சகோதரிகளும், நம் பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய முன்னாள் அதிபர் அன்னை அருட்சகோதரி ஆக்னஸ் சேவியர் அவர்களும் வருகைதந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வை இரட்டிப்பாக்கினார்கள். வந்திருந்த சகோதரிகள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கு கொண்டு இவ்வில்லம் இறையாசீரால் நிரப்பப்பட செபித்தனர். 



1 comment:

  1. புதிய இல்லத்தின் பணிகள் சிறக்க செபிக்கிறேன்.

    ReplyDelete