Sunday, June 24, 2018

'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களோ 
புதிய ஆற்றல் பெறுவீர்கள்'.
                                                                                                                    - எசா. 40:31
ஒவ்வொரு ஆறுமாதத்திலும் புதிய திசுக்கள் வளர்ந்து உடலில் வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. தினமும் புதுப்பிறப்பு அடைவது மனித மனம். நேற்றைய முடிவுகள் இன்று திருப்பிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகின்றன. தனிமனித வாழ்வில், குழும வாழ்வில், திருச்சபையில், அருள் வாழ்வில் என ஒவ்வொன்றிலும் வளர்ச்சியை நோக்கி பயணிப்பது துறவியரின் இலக்கும், கனவும். வளர்ச்சியும் தளர்ச்சியும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் தனது உள்ளத்து உயர் ஆற்றலால், அர்ப்பண வாழ்வால், பணிவாழ்வால் தளர்ச்சிக்கு பிரியாவிடை கொடுத்து வளர்ச்சியை வரவேற்பது பாராட்டிற்குரியது. 

இறைத்துணையோடு பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து சகோதரிகளையும், வழிநடத்திய அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்களையும் நம் மதுரை மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி மற்றும் மாநிலதுணைத்தலைவி அருட்சகோதரி பிரிஜிட் அவர்கள் வரவேற்றார்கள். சகோதரிகள் இன்னும் பணிவாழ்வில் முன்னோக்கிச் செல்ல கடந்து வந்த தடைகளின் வழியாக அனுபவத்தைப் பெற்று, நிகழ்காலத்தின் சவால்களோடு, எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்கள் தீட்டினர் மதுரை மாநில பணிக்குழு உறுப்பினர் சகோதரிகள். தீட்டப்பட்ட திட்டங்கள் பொதுவில் வாசித்து, கலந்தாலோசிக்கப்பட்டு முடிவில் இந்த ஆண்டிற்கான (2018-2019) செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ந்து இனிதே விடைபெற்றனர்.

5 comments:

  1. Congrats to the Provincial Team for the New Blog.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் .நன்று .

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. VERY GOOD. Congratulations to you dear sisters.

    ReplyDelete