Friday, June 22, 2018

பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம்



'நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே 
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது'.
(யோவா 15:8)

மிகுந்த கனிதந்து இறைவனுக்கு சான்று பகர்ந்திட, அமலவைச் சகோதரிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை பணிக்குழுக்களின் வழியாக செயல்படுத்துகிறார்கள். உருவாக்கம், இறையழைத்தல், நற்செய்திப்பணி, கலை மற்றும் பண்பாடு, கல்விப்பணி, பல்சமய உரையாடல், மருத்துவப்பணி, சமூகப்பணி, பொருளாதாரம் போன்ற பணிக்குழுக்களில் உறுப்பினராக உள்ளனர். இவர்களுக்கென்று ஒவ்வொரு ஆண்டும் செயல்திட்டக் கூட்டம் மாநில இல்லத்தில் நடைபெறும். 

இந்த ஆண்டிற்கான (2018 - 2019) பணிக்குழுக்களின் செயல்திட்டக் கூட்டம் மதுரை மாநில இல்லத்தில் 24.06.2018 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. நமது மாநில அன்னை அருள்சகோ. அ. ஞானசௌந்தரி அவர்கள் தலைமை ஏற்க, அருட்தந்தை சூசை செல்வராஜ் அவர்கள் இக்கூட்டத்தை வழிநடத்துவார்கள்.   



2 comments: